மத்திய அமைச்சரவை
ஒடிஷா மாநிலம் ஜர்சுகுடா விமான நிலையத்தை “வீர் சுரேந்திர சாய் விமான நிலையம், ஜர்சுகுடா” என்று பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2018 12:13PM by PIB Chennai
ஒடிஷா மாநிலம் ஜர்சுகுடா விமான நிலையத்தை “வீர் சுரேந்திர சாய் விமான நிலையம், ஜர்சுகுடா” என்று பெயர் மாற்றம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வீர் சுரேந்திர சாய் ஒடிஷாவைச் சேர்ந்த பிரபல விடுதலை போராட்ட வீரர். ஜர்சுகுடா விமான நிலையத்திற்கு இவரது பெயரை சூட்டுவது அவருக்கு செலுத்தும் தகுந்த அஞ்சலியாக இருக்கும். இந்த பெயர் மாற்றம் ஓடிஸா மாநில மக்கள் மற்றும் அரசின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1551501)
வருகையாளர் எண்ணிக்கை : 168