நிதி அமைச்சகம்
2019-20 ஆம் ஆண்டில் பொதுத் துறை பங்குகள் விற்பனைக்கு உயர்த்தப்பட்ட இலக்கு ரூ.1,05,000
प्रविष्टि तिथि:
05 JUL 2019 1:42PM by PIB Chennai
2019-20 ஆம் நிதியாண்டில் பொதுத் துறை பங்குகள் மூலம் ரூ.1,05,000 கோடி திரட்டுவது என்று உயர்த்தப்பட்ட இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது இந்தத் தகவலை வெளியிட்டார்.
நிதி சாராத பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்கு 51 %- க்கும் குறைவாக சென்றுவிடாத வகையில், பங்குகளை விற்கும் கொள்கையை அரசு கடைபிடித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
********
(रिलीज़ आईडी: 1577507)
आगंतुक पटल : 203