வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் நகராட்சி திடக்கழிவுகளின் அறிவியல்பூர்வ நடைமுறைச் செயல் அதிகரிப்பு- தமிழகம், புதுவை குறித்த தகவல்கள்

प्रविष्टि तिथि: 06 DEC 2021 4:05PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக  பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு கௌஷல் கிஷோர் கீழ்காணும் தகவல்களை அளித்தார். 

நகர்ப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின்  முயற்சியால், அனைத்து நகரங்களும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றும் நடைமுறையை தொடங்கியுள்ளன.

இதன் விளைவாக, 2014-ல் 18% ஆக இருந்த நகராட்சி திடக்கழிவுகள் அகற்றும்  அறிவியல்பூர்வ  செயலாக்கம் தற்போது 70% ஆக அதிகரித்துள்ளது.

நகர்ப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின்  கிழ், கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான கூடுதல் மத்திய உதவியை இந்திய அரசு வழங்குகிறது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரு 6,375.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த நகர்ப்புறங்களை பொருத்தவரை, ஒரு நாளைக்கு 12,464 மெட்ரிக் டன் கழிவு உருவாகிறது. செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட கழிவின் அளவு ஒரு நாளைக்கு 6,606 மெட்ரிக் டன் ஆகும். செயல்முறைக்கு உட்படுத்தப்படாத  கழிவின் அளவு ஒரு நாளைக்கு 5,858 மெட்ரிக் டன் ஆகும்.

புதுச்சேரி நகர்ப்புறங்களை பொருத்தவரை, ஒரு நாளைக்கு 275 மெட்ரிக் டன் கழிவு உருவாகிறது. செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட கழிவின் அளவு ஒரு நாளைக்கு 0 மெட்ரிக் டன் ஆகும். செயல்முறைக்கு உட்படுத்தப்படாத கழிவின் அளவு ஒரு நாளைக்கு 275 மெட்ரிக் டன் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778492

                                                                                         *************


(रिलीज़ आईडी: 1778585) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi