தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2022 3:32PM by PIB Chennai
சமூக, பொருளாதார பிரிவுவாரியான கணக்கெடுப்பு 2011-லிருந்து அடையாளம் காணப்பட்ட அமைப்புச்சாரா துறையின் தகுதி பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டணம் இல்லாமல் மருத்துவச் சிகிச்சைக்கான தேசிய சுகாதார நலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமரின் ஆயுஷ்மான் பாரத், மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆகியவற்றுடன் சேர்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு.ராமேஷ்வர் தெலி கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அவர், இந்தத் திட்டம் தில்லி, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தவிர அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படுகிறது என்றார். 29.03.2022 நிலவரப்படி 17 கோடியே 90 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813166
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1813273)
வருகையாளர் எண்ணிக்கை : 242