பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தின் ஹாபூரில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2022 6:55PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹாபூரில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்து, மனதை உலுக்குகிறது.  இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் சாத்தியமான பிற அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1831191) வருகையாளர் எண்ணிக்கை : 161