விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது; மத்திய வேளாண் இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி
प्रविष्टि तिथि:
08 JAN 2023 6:19PM by PIB Chennai
விவசாயிகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், அவர்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி உறுதியளித்தார்.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு, நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றார்.
ஜனவரி 6, 2023 அன்று, எந்தவொரு விவசாயியின் அனைத்து விண்ணப்பங்களின் உரிமைகோரல்களையும் தனித்தனியாக எடுக்கக்கூடாது, ஆனால் விவசாயி புரிந்துகொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் கணக்கிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியதை அவர் சுட்டிக்காட்டினார்.
*****
MS/PKV/DL
(रिलीज़ आईडी: 1889633)
आगंतुक पटल : 233