உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு பதப்படுத்தும் தொழில்துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம்

Posted On: 15 DEC 2023 3:11PM by PIB Chennai

உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கான, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் (பி.எல்.ஐ), அதுதொடர்பான வழிகாட்டுதல்களின்படி செயல்படுத்தப்படுகிறது. இதில், குறிப்பிட்ட நிதியாண்டில் பயன்பெற விரும்பும் நிறுவனங்கள் அந்த நிதியாண்டுக்கு முன்பு வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும். 2021-22-ம்  நிதியாண்டில் ரூ. 584.30 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்த பின்னர்,  திட்ட வழிகாட்டுதல்களில் உள்ள தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் பயனாளி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 8 நிறுவனங்கள் இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சுமார் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2023 செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் நிறுவனங்களில்  2,37,335 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்

***

ANU/PKV/PLM/AG/KV


(Release ID: 1986694)
Read this release in: English , Urdu , Hindi