சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 19 DEC 2023 5:38PM by PIB Chennai

2024  மார்ச் 31-க்குள் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்டும் மத்திய அரசு திட்டத்தின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 கோடியே 94 லட்சம் வீடுகளுக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்த அமைச்சர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளில் 13.12.2023 வரை 2 கோடியே 51 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின்படி மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 7,79,851 ஆகும். இவற்றில் 2021 – 2022-ல் 2,21,945 வீடுகளும், 2022 – 2023-ல் 37,427 வீடுகளும் பயனாளிகளுக்கு மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மாவட்டம் வாரியாக மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ள வீடுகள் ஒதுக்கீட்டு எண்ணிக்கை விவரத்தையும் அவர் தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:

வ.எண்

மாவட்டத்தின் பெயர்

மாநில அரசின் இலக்கு

1

அரியலூர்

23,295

2

செங்கல்பட்டு

12,750

3

கோயம்புத்தூர்

2,813

4

கடலூர்

55,149

5

தர்மபுரி

23,318

6

திண்டுக்கல்

6,928

7

ஈரோடு

7,460

8

கள்ளக்குறிச்சி

11,669

9

காஞ்சிபுரம்

31,575

10

கன்னியாகுமரி

2,366

11

கரூர்

5,520

12

கிருஷ்ணகிரி

19,029

13

மதுரை

7,953

14

மயிலாடுதுறை

11,417

15

நாகப்பட்டினம்

53,308

16

நாமக்கல்

8,556

17

பெரம்பலூர்

13,920

18

புதுக்கோட்டை

30,719

19

ராமநாதபுரம்

18,906

20

ராணிபேட்

4,124

21

சேலம்

27,562

22

சிவகங்கை

11,136

23

தென்காசி

5,709

24

தஞ்சாவூர்

40,831

25

நீலகிரி

2,737

26

தேனி

1,865

27

தூத்துக்குடி

5,483

28

திருச்சிராப்பள்ளி

22,127

29

திருநெல்வேலி

16,597

30

திருப்பத்தூர்

6,819

31

திருப்பூர்

4,206

32

திருவள்ளூர்

20,790

33

திருவண்ணாமலை

49,496

34

திருவாரூர்

54,490

35

வேலூர்

35,008

36

விழுப்புரம்

1,08,417

37

விருதுநகர்

7,752

 

மத்திய அமைச்சரின் இத்தகைய தகவல்களை மக்களிடம், குறிப்பாக கிராமப் பகுதி மக்களிடம் கொண்டு சென்று மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் நடத்தப்படும் இத்தகைய யாத்திரைகள் மக்கள் வீட்டுவசதி பெறுவதற்கு ஏதுவாக அமையும்.

***

AD/PKV/SMB/RR/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1988314) வருகையாளர் எண்ணிக்கை : 105