உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
13 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா அமல்படுத்தப்படுகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் வி.கே. சிங் தகவல்
प्रविष्टि तिथि:
21 DEC 2023 3:35PM by PIB Chennai
விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனையின் போது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்த, பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு பணியாளர்களை அதிகரிப்பதன் மூலமும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கும் பயோமெட்ரிக் அடிப்படையிலான பயணம் மூலம் விமான நிலையங்களில் பயணிகளுக்கு தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத அனுபவத்தை வழங்கும் டிஜி யாத்ரா, 13 விமான நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிற விமான நிலையங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையமைச்சர் டாக்டர் வி.கே. சிங் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 1989138)
ANU/AD/BS/RS/KRS
(रिलीज़ आईडी: 1989409)
आगंतुक पटल : 181