புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

கடந்த கால தலைவர்கள் எதிர்காலத்திற்கான பார்வையை பகிர்ந்து கொள்ளும் பாரம்பரியத்தை ஐ.ஆர்.இ.டி.ஏ கொண்டாடியது

Posted On: 12 APR 2024 10:41AM by PIB Chennai

ஏப்ரல் 10, 2024 அன்று "பொதுத்துறை தினத்தை" முன்னிட்டு, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை ஐ.ஆர்.இ.டி.ஏ ஒரு கூட்டத்தை நடத்தியது. அதன் முன்னோடிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களை ஒன்றிணைத்து, நிறுவனத்தின் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதையும், தொடர்ச்சியான வெற்றிக்கான பாதையை முன்வைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு நிகழ்வு இதில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் உட்பட ஓய்வு பெற்ற பெரும்பாலான ஊழியர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். அவர்கள் நிறுவனத்தின் எதிர்காலப் பாதை குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை நினைவுபடுத்தி அவற்றைப் பகிர்ந்து கொண்டனர்.

மதிப்புமிக்க முன்னாள் வீரர்கள் தங்கள் அனுபவங்களை விவரிக்கவும், ஐ.ஆர்.இ.டி.ஏ-யின் பயணத்தை மேலும் வளப்படுத்துவதற்கான உள்ளீடுகளை வழங்கவும் இந்த நிகழ்வு ஒரு தளமாக அமைந்தது. முன்னாள் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் நிறுவனத்தின் விரைவான வளர்ச்சிப் பாதையைப் பாராட்டினர். வணிக வெற்றியை வளர்ப்பதற்கும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் உட்பட அதன் பணியாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் நிர்வாகத்தின் முழுமையான அணுகுமுறையை அவர்கள் பாராட்டினர்.

இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய ஐஆர்இடிஏ தலைவர் திரு பிரதீப் குமார் தாஸ், "இந்த ஒன்றுகூடல் நமது மதிப்புமிக்க முன்னோடிகளின் பங்களிப்புகள் மற்றும் ஓய்வு பெற்ற சக ஊழியர்களின் பங்களிப்புகளை கௌரவிப்பது மட்டுமல்லாமல், உள்ளடக்கிய மற்றும் ஒத்துழைப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பதால் இந்த ஒன்றுகூடல் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அவர்களின் அனுபவம் மற்றும் நுண்ணறிவு வளம் விலை மதிப்பற்றவையாகும். அவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியின் மாறும் நிலப்பரப்பில் நாம் பயணிக்கும்போது தொடர்ந்து நம்மை வழிநடத்தும். நமது வளர்ச்சிக் கதை வெறும் எண்ணிக்கை மற்றும் சாதனைகளைப் பற்றியது மட்டுமல்ல; இது நமது வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவர்களைப் பற்றியது. நமது முன்னோடிகளின் ஞானம் மற்றும் வழிகாட்டுதலுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் அதே சிறப்பான மற்றும் ஒத்துழைப்பு உணர்வுடன் ஐ.ஆர்.இ.டி.ஏ-யை புதிய உயரங்களுக்கு  வழிநடத்த நாம் முயற்சிப்போம்"என்று கூறினார்.

கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக நகைச்சுவை கவி சம்மேளனம் பங்கேற்பாளர்களுக்கு நகைச்சுவை மற்றும் தோழமை தருணங்களை வழங்கியது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் (நிதி) டாக்டர் பிஜய் குமார் மொஹந்தி, இயக்குநர் ஸ்ரீ ராம் நிஷால் நிஷாத், தலைமை விஜிலென்ஸ் அதிகாரி ஸ்ரீ அஜய் குமார் சஹானி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிளை அலுவலகங்களில் பணியமர்த்தப்பட்ட ஐ.ஆர்.இ.டி.ஏ அதிகாரிகள் மெய்நிகர் முறையில் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

***

PKV/RS/KV



(Release ID: 2017723) Visitor Counter : 49