தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம்
प्रविष्टि तिथि:
25 JUL 2024 3:54PM by PIB Chennai
2017-18 முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்படும் குறிப்பிட்ட கால தொழிலாளர்கள் கணக்கெடுப்பு மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த தரவு சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை கணக்கெடுப்பு காலம் உள்ளது. கிடைக்கக்கூடிய வருடாந்தர ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அறிக்கைகளின்படி, 2022-23 ஆம் ஆண்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் மதிப்பிடப்பட்ட தொழிலாளர்கள் விகிதம் 56% ஆகவும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் 59.4% ஆகவும் இருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான தற்காலிக மதிப்பீடுகள், 2017-18 ஆம் ஆண்டின் 47.5 கோடியுடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம் ஆண்டில் நாட்டில் வேலைவாய்ப்பு 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. 2017-18 முதல் 2023-24 வரை மொத்த வேலைவாய்ப்பு அதிகரிப்பு சுமார் 16.83 கோடி.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பும் வேலைவாய்ப்பு நிலை பற்றிய ஒரு கருத்தை அளிக்கிறது. 2023-24 ஆம் ஆண்டில் 1.3 கோடிக்கும் அதிகமான நிகர சந்தாதாரர்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்தனர். கடந்த ஆறரை ஆண்டுகளில் (செப்டம்பர் 2017 முதல் மார்ச் 2024 வரை) 6.2 கோடிக்கும் அதிகமான நிகர சந்தாதாரர்கள் EPFO இல் இணைந்துள்ளனர், இது வேலைவாய்ப்பை முறைப்படுத்துவதில் அதிகரிப்பைக் குறிக்கிறது.
வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகும். அதன்படி, கிராமப்புறங்கள் உட்பட நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2036930)
SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2037567)
आगंतुक पटल : 123