எரிசக்தி அமைச்சகம்
24X7 மின் விநியோகம்
Posted On:
05 AUG 2024 3:46PM by PIB Chennai
அனைத்து வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கத்தை அடைவதில் மாநிலங்களுக்கு ஆதரவளிப்பதற்காக தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் சௌபாக்யா திட்டம் போன்ற திட்டங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. மாநிலங்கள் முழுவதும் விநியோக முறையை வலுப்படுத்துவதற்காக ரூ. 1.85 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டன. தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின் கீழ் மொத்தம் 18,374 கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. சௌபாக்யா திட்டத்தின் கீழ் 86 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசு, நிதி ரீதியாக நிலையான மற்றும் செயல்பாட்டு ரீதியாக திறமையான விநியோகத் துறையின் மூலம் நுகர்வோருக்கு மின்சார விநியோகத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதுப்பிக்கப்பட்ட பகிர்மானத் துறை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நிதியாண்டு 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்திய அரசிடமிருந்து ரூ.97,631 கோடி மொத்த பட்ஜெட் ஆதரவுடன் ரூ.3,03,758 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.2.62 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு விநியோக உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய மின்துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் நாயக் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041634
BR/KR
***
(Release ID: 2042020)