சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொது இடங்களை பிரதானப்படுத்துதல்

प्रविष्टि तिथि: 05 AUG 2024 4:15PM by PIB Chennai

மத்திய அரசின் நிதியுதவி திட்டமான பிரதமரின் மக்களுக்கான வளர்ச்சித் திட்டம், வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்கள் உட்பட, நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்த வகை செய்கிறது.இத்திட்டத்தின் கீழ் முக்கிய சமூகத் துறைகளில் உள்கட்டமைப்பு திட்ட அலகுகள் உள்ளன.கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாட்டுத் துறைகள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், விளையாட்டு, சுகாதாரம், சூரிய சக்தி, குடிநீர் திட்டங்கள் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்து வரும் துறைகள் போன்றவை., அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இன்று வரை, தோராயமாக இத்திட்டத்தின் கீழ் 11 லட்சம் அலகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் உள்கட்டமைப்பு அல்லாத அலகுகள்) பள்ளி கட்டிடங்கள், விடுதிகள், திறன் மையங்கள், கல்லூரி கட்டிடங்கள், உறைவிடப் பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள், பெண்களை மையமாகக் கொண்ட வசதிகள் போன்றவற்றை கட்டுவதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / சிஜிஓக்களுக்கு ரூ.25,027.33 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கீழே உள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளபடி பூங்காக்கள், சாலைகள் மற்றும் நூலகங்களை நிர்மாணிப்பதற்காக PMJVK இன் கீழ் 142 திட்ட அலகுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது:

வ.எண்

அலகுகளின் பெயர்

அலகுகளின் எண்ணிக்கை

  1.  

நூலகம்/ டிஜிட்டல் நூலகம்/ நூலகக் கூடம்

127

  1.  

பூங்காக்கள்

2

  1.  

சாலைகள்/ அணுகு சாலைகள்/ உட்புற சாலைகள்

13

 

சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின், பிரதமரின் விராசத் கா சம்வர்தன் (PM Vikas) என்பது சீக்கோ அவுர் கமாவோ, USTTAD மற்றும் நயி மன்சில் உள்ளிட்ட அமைச்சகத்தின் ஐந்து முந்தைய திட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த திட்டமாகும்.சீகோ அவுர் கமாவோ திட்டம் (2014-15 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது) சிறுபான்மை இளைஞர்களின் (14-45 வயது) பல்வேறு நவீன / பாரம்பரிய திறன்களில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நயி மன்சில் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது மற்றும் சிறுபான்மை இளைஞர்கள், பிபிஎல் குடும்பங்களில் இருந்து பள்ளி இடைநின்றவர்கள் பயனடைவதற்கும், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவை வழங்குவதற்காக அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. யு.எஸ்.டி.டி.ஏ.டி திட்டம் இலக்குடன் கூடிய திறன் மேம்பாடு மற்றும் மாஸ்டர் கைவினைஞர்கள் / கைவினைஞர்களின் பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதற்காக 2015 -ல் தொடங்கப்பட்டது.

இந்தத் தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2041670)

MM/AG/KR


(रिलीज़ आईडी: 2042061) आगंतुक पटल : 94
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP