ரெயில்வே அமைச்சகம்
ஜகஜீவன் ராம் ரயில்வே பாதுகாப்பு படை அகாடமிக்கு, லக்னோ திறன் மேம்பாட்டு ஆணையத்தின் சிறந்த மதிப்பீட்டு அங்கீகாரம்
Posted On:
13 AUG 2024 6:36PM by PIB Chennai
லக்னோவில் உள்ள ஜகஜீவன் ராம் ரயில்வே பாதுகாப்புப் படை அகாடமிக்கு திறன் மேம்பாட்டு ஆணையத்தால் மதிப்புமிக்க தர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த மைல்கல் சாதனை, சிவில் சர்வீஸ் பயிற்சியில் சிறந்து விளங்குவதற்கான அகாடமியின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆகஸ்ட் 12, 2024 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனங்கள் மாநாட்டின் போது, இந்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த அங்கீகார சான்றிதழ்களை முறையாக வழங்கினார்.
ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு. மனோஜ் யாதவ், ஜே.ஆர்.ஆர்.பி.எஃப் அகாடமி குழுவினரை வாழ்த்தியபோது, அகாடமியின் அங்கீகாரம், அகாடமியின் ஊழியர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும் என்று கூறினார். இந்தத் தனித்துவமான அங்கீகாரம், குடிமைப் பணி பயிற்சியின் தரத்தை உயர்த்துவதில் அவர்களின் ஆழ்ந்த உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த அங்கீகாரம் அகாடமியின் தற்போதைய பரிணாம வளர்ச்சியைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் ஆறு சிறந்த தலைமை பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக அதை வைத்துள்ளது.
***
PKV/KPG/KV
(Release ID: 2045273)