பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு சுக்தேவ் சிங் திண்ட்சா அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 28 MAY 2025 9:34PM by PIB Chennai

சுக்தேவ் சிங் திண்ட்சா அவர்களின் மறைவுக்கு  பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "அவர் மிகுந்த ஞானமும், பொது சேவையில் உறுதியான அர்ப்பணிப்புணர்வும் கொண்ட ஒரு உயர்ந்த அரசியல்வாதியாகவும், பஞ்சாப் மாநிலத்தில் விளிம்பு நிலையில் உள்ள  மக்கள் மற்றும் அதன் கலாச்சாரத்துடன் எப்போதும் தொடர்பு  கொண்டிருந்தார்" என்றும் திரு நரேந்திர மோடி  குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக வலைதளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில்,

அன்னாரது மறைவு நாட்டிற்கு ஒரு பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார். அவர் மிகுந்த ஞானமும், பொது சேவையில் உறுதியான அர்ப்பணிப்புணர்வும் கொண்ட ஒரு உயர்ந்த அரசியல்வாதியாகவும், பஞ்சாப் மாநில மக்கள் மற்றும் அதன் கலாச்சாரத்துடன் அவர் எப்போதும் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற மேம்பாடு, சமூக நீதி, முழுமையான வளர்ச்சி போன்ற விஷயங்களில் அவர் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார் என்றும், நாட்டின் சமூக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த அவர் அரும்பாடுபட்டார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக தாம் அவரை அறிந்து வைத்திருப்பதாகவும், பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாகப் பழகும் பாக்கியம் தனக்கு கிடைத்தது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்த துயரமான தருணத்தில் எனது சிந்தனைகள் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்."

***

(Release ID: 2132192)
AD/TS/SV/RR


(Release ID: 2132241)