சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஆகாஷ்வாணி செய்திப் பிரிவின் தலைவராக திரு ஆர். சிதம்பரநாதன் பொறுப்பேற்றார்

Posted On: 04 JUL 2025 5:50PM by PIB Chennai

சென்னை ஆகாஷ்வாணி செய்திப் பிரிவின் தலைவராக திரு ஆர். சிதம்பரநாதன் இன்று (04.07.2025) பொறுப்பேற்றுள்ளார். 1998-ம் ஆண்டில் இந்திய தகவல் பணியில் குரூப் “பி” அதிகாரியாகப் பணியில் இணைந்த அவர், 2015-ம் ஆண்டு குரூப் “ஏ” அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.  பின்னர் தில்லி, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். சென்னை ஆகாஷ்வாணி செய்திப் பிரிவின் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு, எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழுக்கான பொது மேலாளராகப் பொறுப்பு வகித்தார்.

   *** 

AD/PLM/KPG/SG


(Release ID: 2142262)
Read this release in: English