நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை சிறப்பு இயக்கம் 5.0-வில் பங்கேற்கிறது

Posted On: 17 SEP 2025 5:51PM by PIB Chennai

தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், நிலுவைப் பணிகளைக் குறைக்கவும், 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்பு இயக்கம் 5.0-வை முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை நடத்துகிறது. இந்த இயக்கத்தின் போது, இத்துறையைச் சேர்ந்த கட்டடங்களின் உட்புறம் மற்றும்  வெளிப்புறப் பகுதிகளில் தூய்மை பணிகள்  மேற்கொள்வது மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் அறிவியல் ரீதியாக  மின்னணுக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இந்த இயக்கத்தின் முதல் கட்டமாக செப்டம்பர் 15 முதல் 30 வரை சிறப்பு இயக்கத்திற்கான தயார் நிலை நடவடிக்கைகளும் அக்டோபர் 2 முதல் 31 வரை அந்நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் மேற்கொள்ளப்பட உள்ளது.

                                                                                                    ***

 

SS/IR/KPG/SH


(Release ID: 2168207)
Read this release in: English , Urdu , Hindi