• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (ஊரகம்) கீழ் 1334 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி

प्रविष्टि तिथि: 25 DEC 2022 7:18PM by PIB Chennai

அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (ஊரகம்) கீழ் 1334 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பிரதமரின் விவசாயி கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15,500 பேருக்கு ரூ.6,000 நிதியுதவியும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

முன்னதாக அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அந்தமான் தலைமைச் செயலாளர் கேஷவ் சந்திரா மற்றும் பிற துறைகளின் செயலாளர்கள் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரம்  மற்றும் அதனால் பலனடைந்த பயனாளர்களின் தரவு போன்றவைகளை எடுத்துரைத்தனர்.

பின்னர் பேசிய அமைச்சர் முருகன், துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, நிலுவையில் உள்ள திட்டங்களை காலம் தாழ்த்தாமல், விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார்.

**************

SM/AP/DL


(रिलीज़ आईडी: 1886540) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English
Link mygov.in
National Portal Of India
STQC Certificate