• Skip to Content
  • Sitemap
  • Advance Search
பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு மணி சங்கர் முக்கோபாத்தியாயாவின் மறைவிற்குப் பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 7:37PM by PIB Chennai

திரு மணி சங்கர் முக்கோபாத்தியாயாவின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வங்காள இலக்கியத்தில் அவர் ஒரு போற்றத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்தார் என்று பாராட்டிய பிரதமர், திரு முக்கோபாத்தியாயாவின் எழுத்துக்கள், உணர்வு ரீதியாகவும், ஆத்மார்த்தமாகவும் மக்களின் வாழ்க்கையை சித்தரித்ததாகக் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி குறிப்பிட்டதாவது:

“சங்கர் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு மணிசங்கர் முக்கோபாத்தியாயா அவர்களின் மறைவை அறிந்து சொல்லொணா துயருற்றேன்.

வங்காள இலக்கியத்தின் போற்றத்தக்க ஆளுமையாக விளங்கிய அவரது எழுத்து, உணர்வுப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் மக்களின் வாழ்க்கையை சித்தரித்தது. அவரது மறக்க முடியாத படைப்புகளின் வாயிலாக பல தலைமுறைகளைச் சேர்ந்த வாசகர்கள் மத்தியிலும், இந்தியாவின் வளமான இலக்கிய உலகிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அன்னாரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணிலடங்காத ரசிகர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”

***

TV/BR/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2230996) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Kannada , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate