Print
XClose
Press Information Bureau
Government of India
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
08 JUL 2020 4:48PM by PIB Chennai
கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கை விட சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமாகும்

கொவிட்டை கண்டறியும் பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,62,679 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 53,000 தனியார் சோதனைச் சாலைகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனையும் சேர்த்து தேசிய அளவில் கொவிட்-19 தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் மொத்தம் 1,04,73,771 ஆகும். 10 லட்சத்திற்கு 7180 என்ற விகிதத்தில் சோதனைகளின் எண்ணிக்கை உள்ளது.

தற்போது 1119 கொவிட்-19 பரிசோதனைச் சாலைகள் நமது நாட்டில் உள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 795, தனியார் பரிசோதனைச் சாலைகள் 324.

· நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 600 (அரசு : 372 + தனியார் : 228 ),

· ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 426 (அரசு : 390 + தனியார் : 36)

· CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 93 (அரசு  : 33 + தனியார் : 60) ஆகும்.

 

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொவிட்-19 நோயாளிகள் குணமடையும் விகிதம் 61.53 விழுக்காட்டை இன்று எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,91,886 அதிகமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 16,883 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இது வரை 4,56,830 பேர் குணமடைந்துள்ளனர். 

தற்போது 2,64,944 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான மற்றும் அண்மைத் தகவல்களுக்கு https://www.mohfw.gov.in/ and @MoHFW_INDIA என்ற இணையதளங்களைத் தவறாமல் பார்க்கவும்.

*****